Saturday, April 5.
  • Breaking News

    யாழில் இன்று அதிகாலை 217 கிலோ கேரளக் கஞ்சா மீட்பு!

     


    யாழ்ப்பாணம் வல்வட்டிதுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில்  217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.


    இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவத்தினரால் குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.


    வல்வெட்டிதுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை அங்கு சென்ற இராணுவத்தினர் , கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில்  217 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர். இவ்வாறு மீட்கபட்டவை வல்வெட்டித்துறை பொலிசாரிடம் கையளிக்கப்பட்டது.


    இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிசார் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad